பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (17.11.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கொட்டடி மீன் சந்தைக்கு அருகாமையில் ஆரம்பமாகி பருத்தித்துறை நகர சபையை சென்றடைந்தது.
கலந்துரையாடல்
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திறகு வருகை தந்திருந்த நிலையில் அருகில் பரீட்சை நிலையம் இருப்பதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, நகரசபை தவிசாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளை நாளை (18.11.2025) நகர சபைக்கு அழைப்பதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மணலினை அகற்ற முடியும் எனவும் தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்