மது போதையில் வந்த தந்தையை அடித்து கொன்ற 16 வயது மகன்!
பொலன்னறுவை பகுதியில் 16 வயது மகன் தாக்கியதில் அவனது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (15) அதிகாலை பொலன்னறுவை வேவதென்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய பொலன்னறுவை வேவதென்ன பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
உயிரிழந்த நபர் மதுபோதையில் வந்து தனது மனைவியை இரும்பு கம்பியொன்றினால் தாக்குவதற்கு முற்பட்டபோது அவரின் மகனும் மகளும் தலையிட்டு தடுப்பதற்கு முயற்சித்தபோது அவர்களையும் தாக்கியுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்பு கம்பியை பறித்து தாக்கியதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருடய சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.