தேசபந்துக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பிரேரணை
புதிய இணைப்பு
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியை அங்கத்துவப்படுத்தும் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் தேடுதலுக்கு பிறகு, தேசபந்து தென்னகோன் சமீபத்தில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நம்பிக்கையில்லா பிரேரனை
இந்த நிலையில், அவரை காவலில் எடுத்த காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, ஏப்ரல் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிபடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 10 மணி நேரம் முன்
