சிறிலங்காவில் களமிறங்கவுள்ள அமெரிக்காவின் சீ.ஐ.ஏ!
இலங்கையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரமான நிலைமைக்கு மத்தியில் சொத்துக்களுக்கு சேதம் விளைத்து, வீடுகளுக்கு தீவைத்தவர்கள் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் காண சிறிலங்கா அரசாங்கம், அமெரிக்கவின் உதவியை கோரியுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏ.விடம் இது தொடர்பான உதவியை கோரியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தொடர் விசாரணை
வன்முறை சம்பவங்கள் நடந்த தினங்களில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்துள்ளனர் என காவல்துறைியனர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க புலனாய்வு பிரிவின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
வன்முறையில் தீ வைக்கப்பட்ட வீடுகள்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

