இலங்கையில் கிளர்ச்சி நிலை! இந்தியா வெளியிட்ட பகிரங்க அறிவித்தல்
Gotabaya Rajapaksa
SL Protest
India
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கோட்டாபய தப்பித்த விவகாரத்தில் எந்தப்பங்கும் இல்லை
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச்சென்ற விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்தப்பங்கும் இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் கிளர்ச்சி நிலையை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறினார்.
இந்தியா தொடர்ந்திருக்கும்
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மூலமான முன்னேற்றத்திற்கு இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்திருக்கும் என்றும் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை எமது மதியநேர செய்தித் தொகுப்பில் காண்க,
மரண அறிவித்தல்