புகை மண்டலமான சிறிலங்கா தலைநகர்! இராணுவ தலைமை அதிகாரிகள் களமிறக்கம்
Sri Lanka Army
Colombo
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கொழும்பில் தொடர்ந்தும் பதற்ற நிலை
சிறிலங்காவின் அதிபர் அலுவலகம், அதிபரின் வதிவிடம் மற்றும் ரணிலின் பிரத்தியேக இல்லம் என்பவை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், பிரதமரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதனால் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவி வருகின்றது.
பதற்ற நிலை வலுவடைந்ததை தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர் புகை தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம், தடியடி எனப் பல வழிகளில் தாக்குதல் இடம்பெற்றது.
பாதுகாப்பு தரப்பு - மக்களிடையே முறுகல் நிலை
இதனால், பாதுகாப்பு தரப்பு - மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன், குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
இதன்விரிவான மற்றும் பல செய்திகளை ஐபிசி தமிழின் இரவுநேர செய்தி அறிக்கையில் காண்க,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி