அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 10 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதவானின் உத்தரவு
தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் திருத்தப்பட்ட முறைப்பாட்டினை தாக்கல் செய்வதற்கும் தினியாவல பாலித தேரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க டொலர் மோசடி
2014 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறு பாரிய தொகை செலுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான குற்றம் என முறைப்பாட்டாளர் தினியாவல பாலித தேரர் குறிப்பிடுகின்றார்.