காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீதான கொடூர வன்முறைத் தாக்குதல் - சுவிஸ்லாந்து கடும் கண்டனம்!
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அதிபர் செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும்.
இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Follow developments at Galle Face with deep concern. The right to peacefully demonstrate and express opinions remains important. We urge for restraint and full access of medical services. Sri Lanka needs mutual respect and cooperation to get on.
— Dominik Furgler (@SwissAmbLKA) July 22, 2022