எரிசக்தி திட்டம் தொடர்பில் சிறிலங்கா பிரதமருடன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் தூதுவர் முக்கிய பேச்சு!
சிறிலங்காவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வலியுறுத்தல்
இதன் போது, எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அரசாங்கம் சார்பாக பிரதமர் நன்றியும் தெரிவித்தார்.
மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புதிய முதலீடுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.