காவல்துறை தடையைத் தகர்த்து காலி நோக்கி முன்னேறும் மகிந்த ஆதரவாளர்கள்- குவிக்கப்பட்ட கலகமடக்கும் காவல்துறை!
அலரி மாளிகையில் இருந்து சென்ற மகிந்த ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மைனா கோ கம தற்போது போர்க்களமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்றவர்களை கலகம் அடக்கும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காலிமுகத்திடலிலும் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலரி மாளிகையில் கோசமெழுப்பிய போராட்டக்காரர்கள் “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் சரியான நேரம்“ என தெரிவித்த நிலையிலேயே காலிமுகத்திடலை நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி மகிந்த ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவாளர்களால் கோட்டா கோ கமவிலும் கூடாரங்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.