சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர் மட்ட கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவு மிகவும் அவசியம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் அவசியமான நிபந்தனைகளில் ஒன்று அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.
தற்போது அவர்களின் ஆதரவு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கான சூழல் ஏற்படாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

