பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடாக மாறியுள்ள இலங்கை - கடுமையாக சாடிய சந்திரசேகரன்!

International Monetary Fund Ranil Wickremesinghe Sri Lanka Janatha Vimukthi Peramuna
By Kalaimathy Oct 01, 2022 11:45 AM GMT
Report

இலங்கை பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும் எமது நாடு என்பது கடன் வாங்கி பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடு அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ரணில், ராஜபக்ச போன்ற அரசியல்வாதிகள் இன்று நாட்டினை இவ்வாறான நிலைமைக்கு தள்ளி இருக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத தொடாபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் முழு நாட்டினையே காவு கொடுத்தவர்களால் இன்று மக்கள் பசியாலும், பட்னியாலும் வாடுகிறார்கள்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் பசியால் மயங்கி விழுங்கின்ற நிலைமை காணப்படுகிறது. எரிபொருள் வரிசையில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துபோன சம்பவங்களும் உள்ளன.

ராஜபக்சாக்களை பாதுகாக்க வந்தவரே ரணில்

பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடாக மாறியுள்ள இலங்கை - கடுமையாக சாடிய சந்திரசேகரன்! | Sri Lanka Government Imf Dollar Rajabaksha

ஆகவே இவ்வாறான சம்பவங்களை நல் வழியில் முன்னெடுப்பேன் என கூறிக்கொண்டு வந்த ரணில் விக்ரமசிங்க ராஜபக்சாக்களை பாதுகாக்க வந்தவரே தவிர வேறு எதையும் செய்ய முடியாத நபராகவே மாறியுள்ளார்.

தற்போது அனைவராலும் பேசப்படுகின்ற பொருளாக IMF மூலமாக 2.9 பில்லியன் டொலர் கிடைக்க இருக்கின்றது. அதன் பின்னர் நாட்டு பிரச்சனைகளைத் தீர்ப்போம் எனக் கூறுகிறார்கள். 

வெட்கம் இல்லாத அரசியல்வாதிகள், கடன் வாங்கி நாட்டினை நாசமாக்கிய வரலாறு இருக்கின்றது. எமது நாடு என்பது கடன் வாங்கி பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடு அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ரணில், ராஜபக்ச போன்ற அரசியல்வாதிகள் இன்று நாட்டினை இவ்வாறான நிலைமைக்கு தள்ளி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு இறுதியான தீர்வாக புதிய மக்கள் ஆணைக்கான சந்தர்ப்பத்தைக் கொடு, தேர்தலை நடத்து, மக்களால் தெரிவு செய்கின்ற மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஒரு புதிய அரசாங்கத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஜெ.ஆர். ஜெயவர்த்தனவின் வழியை பின்பற்றும் ரணில் 

பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நாடாக மாறியுள்ள இலங்கை - கடுமையாக சாடிய சந்திரசேகரன்! | Sri Lanka Government Imf Dollar Rajabaksha

இதுவே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதுவே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் ஆகும். IMF, உலக வங்கி போன்ற நிறுவனங்கள் மக்களின் புதிய ஆணையினை பெற்றுக்கொள்கின்ற பட்சத்திலே நாங்கள் உங்களுக்கு கடன் கொடுப்பதை பற்றி பரிசீலிக்க முடியும் என்று கூறுகிறது.

ஆனால் தனது மாமனாரான ஜெ.ஆர். ஜெயவர்த்தனவின் விளையாட்டினையே இன்று ரணில் விளையாடி வருகின்றார். கட்சிகளை உடைப்பது, கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, போராடுகின்றவர்களை அடக்கி ஒடுக்குவது, போராட்டங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவது போன்றனவாகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சுமையினை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றது. இந்த சுமையினை மேலும் மேலும் மக்கள் மீது திணிக்கின்ற நபராக ராஜபக்சாக்களுடைய கைக்கூலியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க மாறி இருக்கிறார்.

தற்போது இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் என்பது மக்களுக்கான போராட்டம். ஆனால் மக்களின் தலையின் மேல் இடியினை போடுகின்ற நபராக ரணில் விக்ரமசிங்க மாறியிருக்கிறார்.

இது தவிர நாட்டின் முக்கிய வளங்களை விற்றுத் தீர்க்கின்ற, அரச துறையை முற்றாக செயலிழக்கச் செய்கின்ற நடவடிக்கைளை முன்னெடுக்கின்ற நபராகவும் மாறியுள்ளார்.

74 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்களால் நாட்டு மக்களுக்கு எந்தவிதமான விமோசனங்களும் கிடைக்கப்பெற்றதாக வரலாறு இல்லை. தாங்களும் தங்கள் குடும்பங்களும், சாகாக்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொண்டதே வரலாறாக இருக்கின்றது.

ஆகவே இவர்களிடம் இருந்து மீள வேண்டும். மக்கள் இதுக்கு எதிராக போராட வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினைச் சூழ அணிதிரள வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்”  எனவும் தெரவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017