மாணவர்களின் போராட்டத்தை அடக்க முயற்சித்த காவல்துறை - செயற்பாட்டாளர் அதிரடி கைது!
“உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம்” எனும் தொணிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தின் போது, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போராட்டம், அடக்குமுறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது, கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காவல்துறை கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
இதேவேளை, அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
“நிறைவேற்று அதிபர் முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம், இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு,
கொழும்பு கோட்டை பகுதிக்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீது நீர்த்தரை பிரயோகம்
பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது, 3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திற” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் யூனியன் பிளேஸ் ஊடாக போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை பகுதிக்குள் நுழைய முயற்சித்தனர். இதன்போது போராட்டத்தினை கலைப்பதற்காக காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போதே, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.