“தடுமாறும் அரசாங்கமே பதவி விலகு” யாழ் நகரங்களில் சுவரொட்டிகள்!
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kalaimathy
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் யாழ் நகரப் பகுதியில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
"தடுமாறும் அரசாங்கமே பதவி விலகு மக்கள் வயிற்றில் அடிக்காதே" எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.