இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே!

Batticaloa Sri Lanka Sri Lanka Final War
By Kalaimathy May 19, 2022 10:58 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும். இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் நிறைவடைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் தமிழீழத்தை பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன்.

அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் எனத் தெரிவித்தே அப்போது நாம் வெளியேறி இருந்தோம். இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள் எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

மேலும் விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகள் என்ற உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அதாவது விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தம் வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

இந்த யுத்தம் வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை. இலங்கை பிரஜைகளுடன் தான் சிறிலங்கா அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும். இந்த யுத்தமானது சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும். ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.

இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் யுத்தம் நிறைவடைந்தது. உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243 இயக்கங்கள் போர் இட்டு வந்திருந்தன. அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது.

இறுதி யுத்தம் என்பது சரியான முறையில் வெல்லப்படாது அரைகுறையாக முடிவடைந்த ஒன்றே! | Sri Lanka Ltte Warpress Meet

நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடத்தி 11 குழுக்களாக மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர்.

இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர். இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும். சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம் அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை நான் பார்க்கின்றேன் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025