ஊடகத்துறையை மறந்து செயற்படும் கோட்டாபய - ரணில் தலைமையிலான மோசமான அரசாங்கம்!

Tamil Media Sri Lanka Journalists In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 04, 2022 07:08 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருதி ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகவியலாளருமான சுப்பிரமணியம் தியாகு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டில் இன்று எல்லா இடங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியே தங்களுடைய பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்கள்.

ஊடகவியலாளர் தொடர்பில் திட்டமில்லாது செயற்படும் அரசாங்கம்

ஊடகத்துறையை மறந்து செயற்படும் கோட்டாபய - ரணில் தலைமையிலான மோசமான அரசாங்கம்! | Sri Lanka Media Fuel Crisis Journalist Dollar

இதனை சரியான தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்களே. ஆனால் ஊடகவியலாளர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

இன்று நாட்டில் அநேகமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக கருதுகின்றது. ஆனால் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா? என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

ஊடகவியலாளர்கள் பல மணித்தியாலங்களாக அல்லது பல நாட்களாக வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கு காரணம் அவர்கள் களத்திற்கு சென்று மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு இருப்பதால்.

எனவே அவர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய முடியாது. அவர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதனை மிகவும் இலகுவான முறையில் நடைமுறைபடுத்த முடியும். ஏனெனில் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் ஊடாக இவர்களுக்கான எரிபொருட்களை மிகவும் இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இன்று  ஊடகவியலாளர்கள் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, இன்றைய நாளுக்கான செய்திகளை எவ்வாறு தலைமையகத்திற்கு அனுப்புவது.

சம்பங்கள் நடைபெறுகின்ற இடத்திற்கு எவ்வாறு செல்வது. அது மட்டுமல்லாமல் காரியாலயங்களில் கடமையில் இருக்கின்றவர்கள் தங்களுக்கான முறையான போக்குவரத்து இன்மை காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு ஊடகத்துறையையும் அத்தியாவசிய தேவையாக கருதி அவர்களுக்கான எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023