சிறிலங்காவின் முக்கிய அமைச்சின் சேவைகள் மறு அறிவித்தல்வரை முடக்கம்!
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை ஒன்று மறு அறிவித்தல் வரை முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கணனி கட்டமைப்பில் கோளாறு
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆகவே தற்போது, கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த சேவைகள் மீள ஆரமப்பிக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையின்றி செயற்படும் சேவைகள்
எவ்வாறிருப்பினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஏனைய சேவை பெறுநர்கள், தங்களின் சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய,
கொழும்பு தூதுரக சேவைப் பிரிவு 0112 33 88 12 அல்லது 0112 33 88 43
யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் – 021 22 15 970
திருகோணமலை பிராந்திய அலுவலகம் – 026 22 23 182
கண்டி பிராந்திய அலுவலகம் – 0812 38 44 10
குருநாகல் பிராந்திய அலுவலகம் – 0372 22 59 41 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
