சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு! மனோ கணேசனின் நிலைப்பாடு
சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு தொடர்பாக நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை (19) மாலை 6 மணிக்கு கட்சி செயலகத்தில் ஒன்றுகூடவுள்ளது.
இதன்போதே, புதிய அதிபர் தெரிவு தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அதிபர் தெரிவு
ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைப்படும் வகையில் கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சஜித் பிரேமதாச, டலஸ் அழகபெரும, அனுரகுமார திசாநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய நால்வரும் புதிய அதிபர் தெரிவுக்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.