நாடாளுமன்றில் எதிர்கட்சி மீது ஆளும் தரப்பு தாக்குதல் முயற்சி-சண்டியர்களிடமிருந்த உறுப்பினரை பாதுகாத்துத் தருமாறு கோரிக்கை!
நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்தையடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சண்டியர்களிடம் இருந்து பாதுகாத்து தரும் வரையில் நாடாளுமன்ற விவாதங்களை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று மதியம் மனுஷ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து மனுஷ நாணயக்கார, சபாநாயகர் வெளியேறும் வழியாக சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதன் பின்னர் உடனடியாக கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சண்டியர்களிடம் இருந்து தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை புறக்கணிப்பது என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.