சிறிலங்கா படையினரின் தாக்குதலால் இரையாகும் தமிழர்கள் - வடக்கு, கிழக்கில் மோசமாகும் நிலை! சிறீதரன் சுட்டிக்காட்டு (காணொளி)

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Supreme Court of Sri Lanka Samagi Jana Balawegaya
By Vanan Sep 06, 2022 10:20 AM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலுக்கு தமிழர்கள் இரையாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது அண்மைய நாட்களில் கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை மேற்கோள்காட்டி இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் இருக்கும் ஏனைய இடங்களை விட, அதில் வடக்கு கிழக்கில் நாடுகளுடைய போட்டி, அரசியல் போட்டி, தமிழர்கள் மீது திணிக்கப்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 


22ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் முரணான சரத்துக்கள் (இரண்டாம் இணைப்பு)

 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டினை அறிவித்தார்.

22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி அறிவித்தது.

அதன்படி இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 10.45 வரை,

  • சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன.

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் இரையாகும் தமிழர்கள் - வடக்கு, கிழக்கில் மோசமாகும் நிலை! சிறீதரன் சுட்டிக்காட்டு (காணொளி) | Sri Lanka Parliament Live Today

அதனையடுத்து, மு.ப. 10.45 முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020