சிறிலங்கா படையினரின் தாக்குதலால் இரையாகும் தமிழர்கள் - வடக்கு, கிழக்கில் மோசமாகும் நிலை! சிறீதரன் சுட்டிக்காட்டு (காணொளி)

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Supreme Court of Sri Lanka Samagi Jana Balawegaya
By Vanan Sep 06, 2022 10:20 AM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலுக்கு தமிழர்கள் இரையாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது அண்மைய நாட்களில் கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை மேற்கோள்காட்டி இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் இருக்கும் ஏனைய இடங்களை விட, அதில் வடக்கு கிழக்கில் நாடுகளுடைய போட்டி, அரசியல் போட்டி, தமிழர்கள் மீது திணிக்கப்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 


22ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் முரணான சரத்துக்கள் (இரண்டாம் இணைப்பு)

 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர் நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டினை அறிவித்தார்.

22 ஆவது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவற்றை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி அறிவித்தது.

அதன்படி இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 10.45 வரை,

  • சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன.

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் இரையாகும் தமிழர்கள் - வடக்கு, கிழக்கில் மோசமாகும் நிலை! சிறீதரன் சுட்டிக்காட்டு (காணொளி) | Sri Lanka Parliament Live Today

அதனையடுத்து, மு.ப. 10.45 முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025