நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைப்பால் இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகள் - சிம்மாசன உரைக்குத் தயாராகும் ரணில்!
சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக பொது நிறுவனங்களுக்கான குழு மற்றும் பொதுக் கணக்குகளுக்கான குழு போன்ற 50க்கும் மேற்பட்ட குழுக்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு எதிர்வரும் 3 ஆம் திகதி சிறிலங்கா அதிபரால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை நேற்று முந்தினம் நள்ளிரவு முதல் ஒத்திவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.