கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
குருநாகல் மவட்டத்தில் கிராம உத்தியோகத்தர், சிறுவன் ஒருவனை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் பொல்கஹவெல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கால்வாய் கரையில் யானை ஒன்று நீராடிக் கொண்டிருந்ததை குறித்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான்.
விசாரணையில் வெளியான தகவல்
இந்நிலையில், குடிபோதையில் அங்கு வந்த கிராம உத்தியோகத்தர் சிறுவனை தூக்கி கால்வாயில் வீசியுள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு 8 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் கைது
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொல்கஹவெல, உடபொல கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்வாயில் வீசப்பட்ட சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான 54 வயதுடைய கிராம உத்தியோகத்தர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
