அரசுக்கு சொந்தமான மாளிகைகளில் இருந்த தொன்மை வாய்ந்த பொருட்கள் காணவில்லை! காவல்துறையினர் விசாரணை
போராட்டகார்கள் முற்றுகையிட்டிருந்த அரச மாளிகைகளில் உள்ள தொன்மை வாய்ந்த பொருட்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இவ்வாறு காணாமல் போன பொருட்களை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டகார்களால் முற்றுகையிடப்பட்டு இருந்த வேளை சில நபர்களால் அங்கிருந்த தொண்மை வாய்ந்த பொருட்கள் மற்றும் சில பாகங்களை மறைத்து வெளியில் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
போராட்டகாரர்கள் என்ற போர்வை
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் போராட்டகாரர்கள் என்ற போர்வையை பயன்படுத்தி கொள்ளையிட திட்டமிட்ட சிலர் அங்கு நுழைந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
போராட்டம் என்ற போர்வையில் அரசுக்கு சொந்தமான இடங்களை முற்றுகையிட்டு தங்கியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றில் ஆங்கிலேய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு கிடைத்த பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் உட்பட பல பெறுமதியான பொருட்கள் இருந்துள்ளன. இவை தொல்லியல் பெறுமதிக்க பொருட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.