ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...!

SLPP Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe
By Aadhithya Aug 29, 2024 12:59 PM GMT
Report
Courtesy: Gunadharshan

தற்போதைய இலங்கையின் (Sri Lanka) ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டாலும், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கருத்தாடல்கள் காணப்படுகின்றன.

சரியான ஆணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியினர் பரவலாக சாடி வருகின்றனர்.

ரணிலின் ஆட்சியை அடிப்படையாக கொண்ட உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையில் ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா...வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா...வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

வறுமை வளர்ச்சி

அதே நேரம் வறுமை வளர்ச்சியானது 2026இல் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி பணியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிகளை விதித்து பலதரப்பு, இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை பேச்சுவார்த்தைமூலம் நகர்த்தி வருகின்றனர்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

இது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இன்று ரணிலின் பங்காளிகள் அவரை ஒரு சிறந்த தலைவர் என கூறி, தற்போது நடைபெற்று வரும் பொருளாதார சவால்களின் மூலம் இலங்கையை தொடர்ந்து வழிநடத்த அவரால் மட்டுமே முடியும் என்று கூறுகின்றனர்.

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள்

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள்

பொருளாதார மோசடி

இதன் அடிப்படையில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஓரளவேனும் தற்போது நாடாளுமன்றத்தில் ரணிலை ஆதரிக்கிறது. இந்த ஆதரவென்பது ராஜபக்ச குடும்பத்தில் உள்ளவர்களை பொருளாதார மோசடியில் பொறுப்புக்கூற வைக்காததற்கு ஈடான ஆதரவு நிலைப்பாடு என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சர்களும் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, இதன் காரணமாகவே நாமல் களத்தில் இறங்குவதற்கு முன்பே கட்சிக்குள் இருந்த பல அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவை அறிவித்தனர். இதை விரும்பாத ராஜபக்சர்கள் தலைமை ஆசனத்தை தந்தையிடம் இருந்து மகனுக்கு வழங்கியுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து மாயமான ஆபத்தான பொருள்

கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து மாயமான ஆபத்தான பொருள்

கட்சி கூட்டம்

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே நேற்று (28) இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் பகிரப்படும் என சாடியுள்ளார்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

குறித்த மேடையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “மகிந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தால், தம்பியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார். அடுத்த தம்பி பசிலுக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார். அண்ணனை அமைச்சராக்குகிறார். சமல் ராஜபக்சவின் புதல்வருக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு உறவினர்கள் இல்லை. அதன் காரணமாக அவர், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசகர் பதவிகளை வழங்கியுள்ளார். அகில விராஜ் காரியவசம் (Akhila Viraj Kariyawasam), ஆஷூ மாரசிங்க, ருவன் விஜேவர்த்தன, ஹரீன் பெர்னாண்டோ (Harin Fernando), மனுச நாணயக்கார (Manusha Nanayakara) ஆகியோருக்கு இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் என்ன? ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே.” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026