திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹிந்த!
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு நவலோகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் நேற்று மாலையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய தினமே வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரதமர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவலோகா மருத்துவமனையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.