மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த புகையிரத நிலைய அதிபர் சங்கம்!
sri lanka
protest
railways
By Kalaimathy
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய புகையிரத பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று நிறைவடைந்தது. எனினும் சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனபடிப்படையில் இன்று பிற்பகல் புகையிரத நிலைய அதிபர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்