அமெரிக்க அதிரடியால் இலங்கை அதிர்வு ரிபனி மீது ஹெலிகளில் சீல்கள்
இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் கடந்த மாத ஆரம்பத்தில் ஈரானிய போர்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கபட்ட பி;ன்னர் அதே இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்க மறைனஸ் ஆகிய ஈருடக படை சீல்கள் அதிரடியாக நேற்று அதிகாலைக்கு முன்னர் ஒரு சம்பவம் செய்தனர்.
இலங்கையின் தென்கிழக்கில் சுமார் 700 கிலோமீற்றர் தூரத்தில் ரான்ஸ்போன்டர்கள் எனப்படும் இடத்தை இனங்காட்டும் கருவிகளை அணைத்துவைத்துவிட்டு அமெரிக்காவுக்கு தெரியாமல் சிங்கப்பூரை நோக்கிய இரகசிய பயணத்தில் இருந்த எம்.ரி ரிபனி என்ற பெரிய எண்ணைத்தாங்கி கப்பல் சிறிலங்காவின் தேவேந்திரமுனைக்கு அப்பால் கடந்தபோது மாட்டுப்பட்டது.
கடந்த ஞாயிறன்று ஹோர்மூஸ் நீரிணையில் ஈரானிய தௌபீக் கப்பலுக்கு நடந்ததுபோலவே ரிபனியிலும் மளமளவெளன ஹெலிகளில் அதிரடியாக இறங்கிய சீல்கள் அந்த கப்பலை கைப்பற்றி வைத்துள்ளனர்.
தற்போது அமெரிக்க பிடியில் உள்ள இந்தக்கப்பலை என்ன செய்து என்பது இந்தவார இறுதிக்கிடையில் ரம்ப் முடிவுசெய்வார் என பென்ரகன் அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்தக்கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற ஊகங்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் உருவாகியுள்ள இந்த நிலவரங்கள் மற்றும் இலங்கையில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளின் பகிரங்கப்படுத்தலை ஐ.நா சிறிலங்காவிடம் கோரிய நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…