"டயஸ்போரா - இந்தியா இல்லாது ஈழம் பற்றி பேச முடியாது" கடும் தொனியில் எச்சரிக்கை..!

Sri Lanka Sri Lankan Peoples India
By Kiruththikan Jun 07, 2023 01:22 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

"ஆயுத கலாசாரம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் போன்றோருக்கு முதலில் புனர்வாழ்வளிக்க வேண்டும்.

டயஸ்போராக்களை தவிர்த்து ஈழம் பற்றி பேச முடியாது. ஆகவே, ஆயுத கலாசாரத்தை தோற்றுவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு எதிராக உயரிய சபை ஊடாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டயஸ்போரா 

"டயஸ்போரா - இந்தியா இல்லாது ஈழம் பற்றி பேச முடியாது" கடும் தொனியில் எச்சரிக்கை..! | Sri Lanka Tamil Eelam With India Support

அவர் மேலும் உரையாற்றியதாவது: இந்த நாட்டில் ஓர் இனம் நீதி, நியாயம் பற்றி பேசும்போது அந்த இனம் அடக்குமுறைக்குள் உள்ளாகுவது சர்வ சாதாரணம். வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெறுக்கும் பாணியில் நாங்கள் மீண்டும் துப்பாக்கிகளை எடுப்போம். நீங்கள் மௌனமாக இருங்கள் என்ற பலாத்காரமான முறையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அலி சப்ரி போன்ற அமைச்சர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இன நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் கற்றுக்கொடுங்கள். வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆயுத கலாசாரம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்தை உயரிய சபை ஊடாக வன்மையாக கண்டிக்கிறோம்.

டயஸ்போராக்கல் தமிழ் மக்களின் உரிமைகள், பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டயஸ்போராக்களை புறக்கணித்துவிட்டு ஈழம் பற்றி பேச முடியாது. அதேபோல் இந்தியாவை புறக்கணித்துவிட்டு ஈழம் பற்றி பேச முடியாது.

ஆயுதம் ஏந்தும் சூழல்

"டயஸ்போரா - இந்தியா இல்லாது ஈழம் பற்றி பேச முடியாது" கடும் தொனியில் எச்சரிக்கை..! | Sri Lanka Tamil Eelam With India Support

தமிழர்கள் விரும்பி ஆயுதங்களை ஏந்தவில்லை. 1983ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை போன்ற தமிழர்கள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. அரசாங்கம் ஆயுதமேந்த வைத்தது என நீதிமன்றத்துக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

1985ஆம் ஆண்டு தேசியத் தலைவர் பிரபாகரன் சர்வதேசத்துக்கு வழங்கிய நேர்காணலில் நாங்கள் ஆயுதமேந்தும் கொள்கையை கொண்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஆயுதம் ஏந்தும் சூழலை ஏற்படுத்தியது. எமது பாதுகாப்புக்காகவும், தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது என தெளிவாக குறிப்பிட்டார்.

ஆகவே, ஆயுதங்களை நாங்கள் விரும்பி ஏந்தவில்லை. வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் கருத்து : "நீங்கள் தூக்குங்கள் துப்பாக்கி' என்பது போல் உள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்துக்கு அவர் வழிவகுக்கிறார்.

அறவழியில் போராடிய தமிழர்களை நோக்கி முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜயவர்தன போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்டார். அறவழி போராட்டத்தை பாரிய யுத்தமாக மாற்றியமைக்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்தின் பயங்கரவாதம்

"டயஸ்போரா - இந்தியா இல்லாது ஈழம் பற்றி பேச முடியாது" கடும் தொனியில் எச்சரிக்கை..! | Sri Lanka Tamil Eelam With India Support

இந்த நாடு எதை நோக்கி செல்கிறது? தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேர்ந்த சம்பவம் பாரதூரமானது. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது. அரசாங்கத்தின் பயங்கரவாதமாகவே இதனை கருத வேண்டும்.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்கம் பற்றி அரசாங்கம் பேசுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குதல், ஊடகங்களை அடக்குதல் ஜனநாயகமா?

தன்னை ஒரு லிபரல்வாதியாக காண்பிக்கும் அதிபர் தனது பிறிதொரு முகத்தை காண்பிக்கும் வகையில் செயற்படுகிறார். இதன் ஒரு செய்தியே தற்போது வெளிப்படுகிறது என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025