எரிபொருள் விலை குறைப்பு - பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!
எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் மக்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டீசல் போதியளவு கிடைத்தால் மக்களுக்கு நன்மை
மேலும் எரிபொருள் விலையை குறைப்பது மிகவும் நல்ல விடயம். உண்மையில் இந்த நேரத்தில் டீசல் போதியளவில் இருந்திருந்தால் அந்த பலனை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கும்.
அரசாங்கம் விலையை குறைத்து எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தினால் நாம் அந்த பலனை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.