தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே!

Missing Persons Vavuniya Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Sri Lanka
By Kalaimathy Jun 01, 2022 10:06 AM GMT
Report

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இன்று 1928 ஆவது நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்ட இடத்தில் ஈடுபடும் உறவினர்கள் இன்று யாழ் நூலக எரிப்பு நினைவுநாளை நினைவு கூர்ந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக்கெடுப்பு என்ற ஜனநாயக கருவிக்கு அழைப்பு விடுக்க வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடத்த இதுவே சிறந்த தருணம்.

அமெரிக்க, ஐரோப்பிய தலையீடு 

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு அழுத்தம் கொடுத்தால், அதற்கு சிறிலங்கா உடன்படலாம். தமிழ் அரசியலில் இருந்து தமிழரசு கட்சி அகற்றப்பட வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள்.

பொன்னான வாய்ப்பை நழுவவிட்டனர். சுமந்திரனும் சம்பந்தனும் தமிழர்களை பலவீனப்படுத்தியது மட்டுமன்றி இந்த இரண்டு பிச்சைக்காரர்களும் தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கினார்கள்.

அதுமட்டுமன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அழைக்க வேண்டும், அதற்கு அழைப்பு விடுக்க முடியாவிட்டால் அவர் இன்னொரு பொய்யர் என்று தான்  தமிழர்கள் நினைப்பார்கள்.

கஜேந்திரகுமார் சஸ்டிக்கு அழைப்பு

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒருபோதும் சமஸ்டிக்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் இப்போது சமஸ்டிக்கு அழைப்பு விடுக்கிறார் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

எங்களின் குழந்தைகளைக் கண்டுபிடிக்கக் கோரி நாம் போராடும் நாள். எங்களுக்கு உதவ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிடம் இருந்து உதவி பெற இந்த போராட்டத்தை தொடர்கிறோம்.

இன்று எமது ஒரே வரலாற்றைக் காக்கும் நிறுவனமான யாழ்.பொது நூலகத்தை தீக்கிரையாக்கிய நினைவு நாள். ஜூன் 1, 1981 இல் இது முற்றாக எரிக்கப்பட்டது. அதே நேரத்தில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாண சந்தை, வீடுகள், மருந்து கடைகள் மற்றும் ஈழநாட்டு அச்சகம் ஆகியவற்றை எரித்தது.

1980 களில் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் திரும்பிப் பார்க்கும் போது, தமிழர்கள் மீதான இலங்கை பாணி தாக்குதல், உக்ரைன் மீது ரஸ்ய பாணி ஆக்கிரமிப்பு போல் தெரிகிறது. தமிழர்கள் கடந்த கால வரலாற்றை எழுதுவதிலும் அல்லது தமிழர்களின் வரலாற்றின் ஆதாரங்களை வைத்திருப்பதிலும் மிகவும் ஏழ்மையானவர்கள்.

சிங்கள பேரினவாதம்

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

ஆனால் எமது வரலாற்றைக் கொண்டிருந்த ஒரே நிறுவனம் யாழ் பொது நூலகம். நூலகத்தை அழிப்பது ஒரு இனப்படுகொலை. ஜே.ஆர்.ஜெயவர்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்ற இனவாத அரசியல்வாதிகள், சிங்களவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர்.

குறிப்பாக 2009 இல், தமிழர்கள் கொல்லப்பட்ட போது சிங்கள மக்கள் கொண்டாடினார்கள். தமிழர்களின் பகுத்தறிவுக் கொள்கையை ஒருபோதும் சிங்கள மக்கள் ஆதரிக்கவில்லை. எமது இலக்கை அடையும் வரை சிங்களவர்களே எமது எதிரிகள்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்கள் சிங்களவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டும்.

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

சிங்களவர்களை எங்கள் நண்பர்களாக கருதினால் தமிழர்களின் வரலாறு அழிந்துவிடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உதவியுடன் சிறிசேனா என்ற போலி மனிதனின் கீழ் நல்லாட்சியில் நடந்தது. போர்க்குற்றங்கள் தங்கள் நாட்டையும் மகாசங்கத்தையும் அழிக்கும் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துள்ளனர்.

இலங்கையை காப்பாற்ற தமிழர்களிடம் பேசுவதே அவர்களின் தந்திரம். தமிழர்களும் சிங்களவர்களும் பேசி எங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பார்வையை சிங்களவர்கள் உருவாக்க முயல்கிறார்கள். தமிழர்களுக்கான தீர்வை வரையறுப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டை இலங்கை தவிர்ப்பதற்கே இந்த தந்திரம்.

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

அவர்கள் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒன்றுபட்ட தீர்வை விரும்புகிறார்கள். ஒட்டுமொத்த கட்சியும் தமிழர்களை வஞ்சித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அழைக்க வேண்டும், அதற்கு அழைப்பு விடுக்க முடியாவிட்டால் அவர் இன்னொரு பொய்யர் என்று தமிழர்கள் நினைப்பார்கள் .

அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒருபோதும் சமஸ்டிக்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் இப்போது சமஸ்டிக்கு அழைப்பு விடுக்கிறார். அருட் தந்தை ரவிச்சந்திரன் இம்மானுவேல் தான் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம'க்கு பிறகு பிறந்ததாக நினைக்கிறார்.

தமிழர்களை சிங்கள அடிமைகளாக்கியவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே! | Sri Lanka Vavuniya Missing Person Press Meet

அவர் தமிழர்களின் அரசியல் விருப்பம் பற்றி சிங்களவர்களுடன் பேச விரும்புகிறார். அவரை இந்த அறிக்கையை வெளியிட வைத்தது எது? சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையின் வரலாற்றை அவர் படிக்க வேண்டும். அருட் தந்தை இம்மானுவேல் பொறுப்பற்ற ஊழல்வாதி மாதிரி பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.


ReeCha
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026