7 நாடுகளின் உதவியால் மட்டுமே இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது..! வைகோ பகிரங்கம்
7 நாடுகளின் உதவி
7 நாடுகளின் உதவியால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது 7 நாடுகளின் இராணுவ உதவியால் மட்டுமே விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது.
உதவி கிடைக்காது இருந்திருந்தால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது, இன்று அவர்களுக்கென்று ஒரு தேசம் உருவாகியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர் இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்சே கொண்டாடியபோது இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று சொன்னது இன்று நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
வேடிக்கை பார்த்து வரும் மத்திய அரசு
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது.
ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
எனவே மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
