இத்தாலியில் கோரவிபத்து -இலங்கையர் சம்பவ இடத்தில் பலி
இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இத்தாலியின் பெர்கமோவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பெர்காமோவை வசிப்பிடமாக கொண்ட இலங்கையரான வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கரவண்டியில் பயணித்தவேளை
சஞ்சீவ பிரதீப் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவேளை அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெர்கம போக்குவரத்து காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அம்புலன்ஸ்கள் விரைந்தபோதும்
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சஞ்சீவ பிரதீப் ஐ அவசர அம்புலன்ஸ்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு சம்பவ இடத்திற்கு சென்றபோது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் இலங்கையின் மாரவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பணிபுரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
