எரிபொருள் பெறுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொருக்கிய யானைகள்! (படங்கள்)
Batticaloa
Sri Lanka
Eastern Province
Sri Lanka Fuel Crisis
By pavan
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளன.
இன்று (29) அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏழு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொருக்கி சேதமாக்கிவிட்டு வீதியை கடந்து சென்றுள்ளதாக அங்கு நின்றிருந்த வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேதமாக்கப்பட்ட வாகனங்கள்
தாக்குதலில் சேதமாக்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் மூன்று வாகனங்கள் முற்றாகவும், நான்கு வாகனங்கள் சிறிதளவாகவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி காவல் துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி