மீள்வது கடினம்!! நாட்டின் உண்மை நிலவரங்களை போட்டுடைத்தார் ரணில்
இலங்கைக்கு வெளியில் இருந்து சில பில்லியன் டாலர்கள் தேவை, இல்லையெனில் இலங்கையால் மீள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இருப்பினும், நெருக்கடியை தீர்க்க இருக்காது போதுமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
இன்று 21வது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தற்போது, பெட்ரோலுக்கான வரிசைகள் இல்லை, ஆனால் நான் பிரதமரின் வேலையை மட்டுமல்ல, தீயணைப்பு வீரரின் வேலையைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
நெருக்கடியின் தொடக்கத்தில் மட்டுமே உள்ளது நாடு
நாடு நெருக்கடியின் தொடக்கத்தில் மட்டுமே உள்ளது என்றும், இன்னும் மோசமான நிலை வரப்போகிறது.
பருவங்களுக்கு போதுமான உரங்கள் இல்லாததால், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படலாம், அடுத்த பருவத்திற்கு உரம் கிடைத்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் தன்னிறைவு அடைவோம்.
மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட மாட்டார்கள், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடும் காலம் வரும்.
நட்பு நாடுகளின் உதவியில்லாமல் இந்த ஆண்டை கடக்க முடியாது
உதவிக்காக நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அவர்களின் உதவி இல்லாமல் இந்த ஆண்டை இலங்கையால் கடக்க முடியாது.
மற்ற நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவி செய்வதை தவிர்த்த நிலையில் இந்தியா முன்வந்திருப்பது இலங்கைக்குஅதிர்ஷ்டம்.
இலங்கை தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதும், ஆதரவிற்காக நண்பர்களுடன் சமாதானம் செய்வதும் அவசியம்.
இரண்டு நெருக்கடி
இலங்கையை இரண்டு நெருக்கடியில் பாதித்திருக்கின்றது, ஒன்று ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதுதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி.
இரண்டாவது நெருக்கடியானது உக்ரைன் நெருக்கடியின் உலகளாவிய தாக்கம் என்றும், இலங்கை அதன் ஆரம்பத்தை மட்டுமே பார்க்கிறது", எனக் குறிப்பிட்டுள்ளார்.
