அவசரகால நிலை நீடிப்பு : 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் சுமார் 60 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது வரவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தீர்மானம்110 மேலதிக வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அவசரகால சட்டத்தின் நீடிப்பு தொடர்பான இந்த தீர்மானம், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் தேவையை முன்னிட்டு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் சிலர் இந்த நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசரகால சட்டத்தின் தொடர்ச்சி பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
QAHMT94
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |