17 ஆண்டுகால வெற்றி கூட்டணி முடிவிற்கு வந்தது : சிஎஸ்கேவை விட்டு விலகினார் ஸ்டீபன் பிளெமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஸ்டீபன் ஃபிளெமிங், 2008 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக விளையாடினார். அதன்பிறகு, 2009 சீசனிலிருந்து சென்னை நிர்வாகம் அவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது.
சென்னை அணி படைத்த சாதனை
அதிலிருந்து, 2026 போட்டித் தொடர் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றது. மேலும், 12 முறை பிளே ஒஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி புதிய சாதனைகளை படைத்தது.
என் இதயத்திற்கு நெருக்கமான அணி
ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அவரது விலகல் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், "இந்த 17 ஆண்டுகள் என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயம். சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து பணியாற்றியது எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். வெற்றிகளும், சவால்களும், ரசிகர்களின் அன்பும் என்றென்றும் என் நினைவில் இருக்கும். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான அணியாகவே இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |