ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்திய (India) தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
இந்திய அரசாங்கம் உதவி
சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில், பல வகையில் இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது.
இருப்பினும், அவர்களின் இனப்பிரச்சினைக்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, இது தொடர்பில் மோடி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)