யாழில் தொடரும் வன்முறை செயற்பாடுகள்: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில்

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Raghav Jul 08, 2024 10:39 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக காவல்துறையிடம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

கணினி குற்ற புலனாய்வு

இந்நிலையில், யாழ். பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், "எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பதிலளித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், ”காவல்துறையினர் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும்? இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது.

யாழில் தொடரும் வன்முறை செயற்பாடுகள்: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில் | Sword Incidents Have Increased In Jaffna

அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும். அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் கணினி குற்ற புலனாய்வு (Cybercrime) இயங்குகிறது. அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும்.

அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம உத்தியோகத்தரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் காவல்துறையினரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை.

 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்: மும்பை மற்றும் அசாம் மாநிலங்கள் கடும் பாதிப்பு

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்: மும்பை மற்றும் அசாம் மாநிலங்கள் கடும் பாதிப்பு

காவல்துறை திணைக்களம்

'ஒப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில்” என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் தொடரும் வன்முறை செயற்பாடுகள்: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில் | Sword Incidents Have Increased In Jaffna

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan), "காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா அப்படியாயின் காவல்துறை திணைக்களம் ஏன் இயங்குகிறது வாள்வெட்டு கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது.

சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாட்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களை தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது காவல்துறையினர் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது” என கூறியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

கடற்படையினருக்கு கிடைத்த தகவல்: மன்னாரில் மூவர் கைது

கடற்படையினருக்கு கிடைத்த தகவல்: மன்னாரில் மூவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024