தமிழ் - முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் தந்திரம்! வெளிப்படுத்திய சிறீதரன்

Sri Lankan Tamils Kilinochchi Ranil Wickremesinghe S Shritharan Government Of Sri Lanka
By Vanan Mar 09, 2023 06:54 PM GMT
Report

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துவதற்கான கைங்கரியத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அண்மையில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், அதன் முதல் கட்டம்தான் பச்சிலைப்பள்ளி பகுதியில் 100 ஏக்கர் காணிகளை முஸ்லிம் சகோதரர்களுக்கு வழங்க எடுக்கப்படுகின்ற முயற்சி எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் குடியேற்றம்

தமிழ் - முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் தந்திரம்! வெளிப்படுத்திய சிறீதரன் | Tamil Muslim Relations Muslim Immigration Palai

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணி சீர்திருத்த குழுவிற்கு சொந்தமான 100 ஏக்கர் காணிகளில் உடனடியாக முஸ்லிம் சகோதரதர்களை குடியேற்றுவதற்கான திட்டம் ஒன்றை ரணில் அரசாங்கம் தன்னுடைய முகவராக இருக்கின்ற ஆளுநருக்கூடாக செயற்படுத்த முனைவதாக நாங்கள் அறிகின்றோம்.

மிக முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டத்திலே 12ஆயிரம் பேர் காணியற்றவர்களாக இருக்கின்றார்கள். 4000பேர் வரையானவர்கள் சொந்த இடம் இல்லாமல் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட தோம்பு முறையிலான சட்டங்களைக்கொண்ட பச்சிலைப்பள்ளி பகுதியில் ஆதி காலங்களில் அதிக காணிகளை வைத்திருந்த தமிழ் மக்களிடம் பெறப்பட்ட காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி வங்கி ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.

இப்பொழுது குறித்த காணியில் முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதன் அடிப்படை நோக்கமானது தமிழ் மக்களிற்கும் முஸ்லிம் மக்களிற்குமிடையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துவதற்கு தான்.

நான் முஸ்லிம் சகோதரர்களிடம் பகிரங்கமாக ஓர் வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்கிடமும் இன்றும் சுமுகமான உறவு நிலை ஏற்படாத சூழல் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இரண்டு பகுதியினாலும் ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாகின்றது.

விடுதலைப் புலிகள் முஸ்லிம் சகோதரர்களை இங்கிருந்து அனுப்பினார்கள் என்ற செய்தியை அவர்கள் சொல்லிக்கொண்டதும், யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் தமிழ் மக்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை எனவும், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் கக்கிம் ஐக்கிய மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று தமிழ் மக்களிற்கு எதிராக கோசம் எழுப்பிய நாட்களும் உண்டு.

அதேபோல, தான் தமிழ் மக்களின் காணிகளை பறித்தேன் எனவும், ஆயுத குழுக்களை உருவாக்க தமிழ் மக்களை அழித்தேன் எனவும் அவர்களின் இடங்களை அழித்தேன் எனவும் கிஸ்புல்லா குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம் சகோதரர்களும் தடை

தமிழ் - முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் தந்திரம்! வெளிப்படுத்திய சிறீதரன் | Tamil Muslim Relations Muslim Immigration Palai

அதேவேளை, கல்முனையில் தமிழ் மக்கள் நூற்றுக்கு நூறுவீதம் வாழுகின்ற பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவதற்கு முஸ்லிம் காங்கிரசும் சில முஸ்லிம் சகோதரர்களும் தடையாக இருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்றபொழுது, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கிட்டத்தட்ட 400 முஸ்லிம் குடும்பங்களை 100 ஏக்கர் காணியில் குடியேற்ற முனைதல் என்பது அடிப்படையில் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரச்சினை உடையவர்களாக மாற்றுவதற்கும், தொடர்ந்தும் அவர்களிற்கிடையில் பிரச்சினை எழுவதற்கான களத்தை ரணில் விக்ரமசிங்க போடுகிறார் என்பது வெளிப்படையானது.

சிறீதரன் மீதான குற்றச்சாட்டு

 தமிழ் - முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் தந்திரம்! வெளிப்படுத்திய சிறீதரன் | Tamil Muslim Relations Muslim Immigration Palai

ஏப்ரல் 21இல் தேவாலயங்களில் வெடித்த குண்டுவெடிப்பினால் உயிரிழந்தவர்களும் தமிழர்கள். அதன் ஆறாத வடுக்கள் இன்றும் உள்ளது. சஹ்ரான் மூலமாக அந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தாலும், அதன் இலாபங்களை கோட்டாபயவும், அவர்கள் குடும்பமும் அனுபவித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள்” - எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதன்பின்னர் முஸ்லிம் மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க எடுக்கும் முயற்சிக்கு சிறிதரன் எதிர்ப்பு தெரிவிப்பதான கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023