மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Narendra Modi India
By Shadhu Shanker Jun 12, 2024 09:22 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இனி வருகின்ற ஐந்து ஆண்டுகள் மோடி அரசே இந்திய மத்திய அரசாங்கமாக இருக்கப் போகிறது அதனை சரியாக தமிழர் தரப்பு கையாள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சபா குகதாஸ் இன்றையதினம்(12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) மூன்றாவது தடவையாக பதவி ஏற்ற பின்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்குமான(Ranil wickremesinghe) சந்திப்பில் வரும் ஓகஸ்ட் மாதம் பிரதமர் மோடி இலங்கை வர இருப்பதான செய்தியை குறிப்பிட்டிருந்தார்.

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

 வேறுபட்ட கோரிக்கைகள்

தமிழர் தரப்பில் பிரதமர் மோடிக்கு தனித் தனியாக வாழ்த்துக்களை அனுப்பினாலும் வேறுபட்ட கோரிக்கைகளையும் வாழ்த்துடன் சிலர் இணைத்திருந்தமையை காண முடிந்தது.

மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Tamil Side Should Send Reunification Demand Modi

கடந்த காலத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினர். அதன் பின்னர் பாரதப் பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதற்கான அழைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குழுவினருக்கு இந்தியத் தரப்பால் அனுப்பப்பட்டது அதற்கு அலட்சியமான காரணங்களை பொது வெளியில் கூறி சந்திப்பை தவிர்த்தனர்.

இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அமைப்புக்களும் இணைந்து மீண்டும் ஒரு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சகல அமைப்புக்களினது கையொப்பங்களுடன் அனுப்ப வேண்டும்.

அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன்

அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன்

ஈழத் தமிழரின் பூர்வீக வாழ்விடம்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத் தமிழரின் பூர்வீக வாழ்விடம் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதற்கான அரசியல் அதிகாரப் பகிர்வை பாரத தேசம் பெற்றுத் தருவதற்கான சூழலை தமிழர் தரப்பு ஒற்றுமையாக உருவாக்க வேண்டும்.

மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Tamil Side Should Send Reunification Demand Modi

இலங்கைத் தீவில் அதிபர் கதிரையில் அமர்பவரை பெரும்பாலும் பிராந்திய, பூகோள நாடுகளே தீர்மானிக்கின்றன அத்துடன் கடந்த காலத்தில் இந்திய இராஐதந்திர தரப்புக்கும் தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடையங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு ஒற்றுமைக் கடிதம் காலத்தின் கட்டாயம்.

தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா தனது வெளி விவகாரத்தில் ஏற்படும் அரசியல், இராஐதந்திர நெருக்கடிகளை முகம் கொடுக்க இலங்கை அரசை தங்கள் அரவணைப்பில் வைத்திருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் முடிவு

இத்தகைய நிலையில் இந்தியாவின் முடிவுகளை தாண்டி மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரக் கூடிய ஏது நிலைகள் தெளிவாக இல்லை எனவே ஆட்சியாளர்களின் அறிக்கைகளை விட பிராந்திய சர்வதேச அரசியல் இராஐதந்திர நீரோட்டங்களின் ஊடாகவே ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.

மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Tamil Side Should Send Reunification Demand Modi

இந்திய ஆட்சியாளர்களையும் அதன் செயற்பாடுகளையும் குறுகிய கதிரை அரசியலுக்காக விமர்சிப்பதும் தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக கோமாளித்தனமான அறிக்கைகளும் தமிழ் இனத்தை மேலும் பலவீனப்படுத்திவிடும்.

எனவே இனி வருகின்ற ஐந்து ஆண்டுகள் மோடி அரசே இந்திய மத்திய அரசாங்கமாக இருக்கப் போகிறது அதனை சரியாக தமிழர் தரப்பு கையாள வேண்டும்’’ என்றுள்ளது.

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன்

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025