350 கிராம் ஹெரோயினுடன் ஆசிரியர் கைது..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் இன்று காலை வாகனத்தில் சென்ற போது வெல்லம்பிட்டியவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
350 கிராம் ஹெரோயின்
கைதாகும் போது அவரிடமிருந்து 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
