தங்காலைக்கு ஓடிச்சென்று மகிந்தவை சந்தித்த விமல் வீரவன்ச
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) நேற்று (16) சந்தித்தார்.
மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் "விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.
நன்றி தெரிவிப்பு
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாக அவரை சந்திக்கச் சென்றோம்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை கார்ல்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
