முழு உலகையும் அதிர வைத்த 18 வயது நபர்!! வெளிவரும் பின்னணி
அமெரிக்காவை மட்டுமல்லாமல் இன்று முழு உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி 21 பேரை பலியெடுத்த பாரிய துப்பாகிக்கிச்சூட்டு சம்பவத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு குறித்து பெரும் விமர்சனங்கள் தோன்றியுள்ளன.
குறித்த இளைஞர் சிறுவயதில் இருந்து மனப்பிறழ்வுக்கு ஆளானவர் எனவும் சிறுவயதில் பேச்சுக்குறைபாட்டுள்ள இவர், பாடசாலையில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் தனது படிப்பை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரெக்சஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 19 பேர் உட்பட 21 பேரை சுட்டுக்கொன்ற 18 வயதான சால்வடோர் ரொலாண்டோ ராமோஸ் கடந்த 4 நாட்களாக சமூகவலைதளங்களில் துப்பாக்கிகள் பற்றி அதிகமான பதிவுகளைப் பகிர்ந்து, தான் ஒரு காரியம் செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்த போதிலும் சமூகவலைத்தள கண்காணிப்பார்கள் இது குறித்து எந்த முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லையென தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தனது 18ஆவது பிறந்தநாளில் வாங்கியுள்ளார்.
முதலில் தனது வீட்டில் பாட்டியை சுட்டு விட்டுத்தான் அருகிலிருந்த ஆரம்ப பாடசாலையில் இந்த குருரத்தை அரங்கேற்றியுள்ளார்.
ரொலாண்டோவின் தாய் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் அவரது குடும்பச்சுழலும் சரியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ரொலாண்டோ பதிந்த சில பதிவுகள் இந்த தாக்குதலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் தனது நண்பிக்கு அனுப்பிய ஒரு தகவலில், தான் ஒரு சின்ன ரகசியத்தை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி, வாயை மூடியிருக்கும் சிமைலி எனப்படும் குறியிட்டு சின்னம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
அதற்கு அந்த நண்பி என்ன செய்யப்போகிறாய்? என ஒரு வினாவை தொடுத்தபோது, அதற்கு பதிலளித்த ரொலாண்டோ, இந்த விடயத்தை பகல் 11 மணிக்கு முன்னர் சொல்வதாக பதிவிட்ட பின்னர், பகல் 11.32 மணிக்கு துப்பாக்கித் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.