விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி : அரச தரப்பு வெளியிட்ட தகவல்
விவசாயதுறைக்கு பயன்படுத்த கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துளதாக விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (16.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு தெரியும்.
இராசயன கிருமி நாசினி
அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம்,விவசாயதிணைக்களம் உள்ளிட்ட திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம். திர்காலத்தில் பொருத்தமான கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க தீர்மானித்துள்ளோம்.
மக்களின் இடத்தினை மக்களுக்கு கொடுக்கவேண்டும் அதனை கட்டாயம் செய்வோம். அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலப்பகுதியில் மக்களிடம் இருந்த காணி பத்திரங்கள் உறுமய என்ற செயற்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள் ரீதியாக காணப்படுகின்றன. அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
