மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி

Sri Lanka Police Mannar Sri Lanka Magistrate Court
By Kiruththikan Jun 09, 2022 04:20 AM GMT
Report

மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் தந்தையொருவர் 18 வயதிற்கு குறைந்த பிள்ளையொருவருக்கு உலோக கரண்டியை சூடாக்கி சுட்டதாக அதாவது சித்திரவதை செய்ததாக கூறி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 308A இன் கீழ் குற்றப்பகர்வு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கை தொடர்ந்து வாதாடா விரும்பாத தந்தை தான் குற்றவாளி என மன்றுரை செய்ததன் பின்னர் அவரின் மகளாகிய 14 வயது சிறுமியும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணை 

குறித்த தந்தை சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணி டினேஸன் அஜராகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிரியின் சொந்த மகள் எனவும் அந்த சிறுமி இன்றைய தினம் தனது தந்தையுடனேயே நீதிமன்றம் வந்துள்ளதாகவும், இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையென்றும் இவர் கடற்தொழில் செய்தே தனது குடும்பத்தை பராமரித்து வருவதாகவும் இவருக்கு சிறைதண்டணை விதிக்கபடும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த குடும்பம் அந்த சிறுமி உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள், என்றும் ஒத்திவைத்த சிறைதண்டனையோ அல்லது தண்ட பணத்தினால் தண்டிக்குமாறும் விண்ணப்பத்தினை பதிவு செய்திருந்தார்.

மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி | The Girl Who Cried In The Court

வழக்குத்தொடுனர் சார்பாக தோன்றிய அரச சட்டத்தரணி அவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு தண்டணையாக 2 வருடங்கள் குறையாத 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைதண்டனை மற்றும் தண்டபணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 308A(2) கூறுவதாகவும் ஆதலினால் கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒத்திவைத்த சிறை தண்டணை வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட வழக்குகளை மேற்கொள்காட்டியும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதினை அரசியல் அமைப்பின் உறுப்புரிமை மற்றும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு சமவாயத்தினையும் எடுத்துக்காட்டி அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார்.

இருபக்க விண்ணப்பத்தினையும் செவிமடுத்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அந்த சிறுமியினை அழைத்து இந்த சம்பவத்திற்கு பிறகு வேறு எது துன்புறுதல் ஏற்பட்டதா என வினாவினார் அந்த சிறுமி இல்லையென்றும் அப்பா எங்களை நல்லா பார்த்துக்கொள்கின்றார் என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் உங்களை யார் பார்த்துக்கொள்கின்றார் என கேட்க மழலை மொழியில் அப்பா தொழில் போய் உழைக்கின்றார் என்றும் நானும் தம்பி தங்கைகள் இருக்கின்றார்கள் என்றும் அம்மா வீட்டில்தான் இருக்கின்றார் என்றும் சிறுமி கூறியுள்ளார்.

இரு பக்க வாத பிரதிவாதங்களை ஆராய்ந்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், சட்டம் கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஏற்பாட்டினை கொண்டிருந்தாலும் வழக்கின் தன்மை எதிரியின் குடும்ப நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு 2 வருட சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டும் 10000/- தண்ட பணமும் விதித்தார்.

சத்தமிட்டு அழுத சிறுமி

மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி | The Girl Who Cried In The Court

தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக எதிரி சிறை கூண்டில் அடைக்கப்பட்டார். தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டதினை பார்த்த சிறுமி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழுதுள்ளார்.

அந்த நிலையில் அங்கிருந்த பெண் காவல்துறையினர் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

மீண்டும் வழக்கும் அழைக்கப்பட்டது சிறுமியின் அழுகை நிற்கவில்லை கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அச்சிறுமியை அழைக்குமாறு கூறினார். ஏன் அழுகின்றீர்கள் என வினாவினார், சிறுமி அப்பா வேண்டும் என்று கூறியுள்ளார்,

நீதிபதி அவர்கள் அழ வேண்டாம் அப்பா வருவார் அப்பாக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லையென ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் மன்றுக்கு கருத்து தெரிவித்த நீதிபதி அவர்கள் சட்டத்தில் கட்டாய சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கூறியிருக்கின்ற போதிலும் இவ்வாறான புற விடயங்களையும் அவதானிக்க வேண்டுமெனவும் சிறைத்தண்டனை விதிக்கபடும் பட்சத்தில் குடும்பம் மாத்திரமல்ல சிறுமியும் பாதிக்கப்படுமென கூறினார்.

குறித்த சம்பவம் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்திருந்தது. 

மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி | The Girl Who Cried In The Court

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025