உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..!
காற்று மாசுபாடு காரணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இருமலால் அவதிப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னணியில் தான் ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அண்மையில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
இருமலால் அவதிப்படும் அதிபர்

காற்று மாசுவை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தோனேசிய அதிபர் விடோடோ, சுமார் ஒரு மாத காலமாக இருமலால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனைகளை நடத்தியுள்ளனர், மேலும் அவரது வீடு அமைந்துள்ள ஜகார்த்தாவில் உள்ள காற்று மாசுதான் காரணம் என்று சந்தேகிக்கிறார்கள்.
ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறுவதற்கு முன்பே, தலைநகர் மிகவும் மாசுபட்ட காற்றில் இருந்தது.
மாசுபாட்டிற்கான காரணம்

நகருக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், பயோ எரிவாயு மற்றும் நிலக்கரி எரிப்பு போன்றவை இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கூட உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அதிபர் தனது செயலின் விளைவுகளையே தற்போது அனுபவிக்க வேண்டியுள்ளதாக பல தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.