நடுவானில் நடந்த சம்பவம் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport Kuwait
By Sumithiran Jul 30, 2024 11:29 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

குவைத்தில்(kuwait) இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த விமான பணிப்பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டிய பயணியை கட்டுநாயக்கா விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 குவைத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இன்று (30) அதிகாலை 02:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ்

அந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்காக ஹொரணையை சேர்ந்த 35 வயதுடைய நபர் 11 G ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இந்த விமானம் புறப்பட்டு 03.30 மணித்தியாலங்களுக்குப் பின்னர் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்பட்டன.

நடுவானில் நடந்த சம்பவம் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது | The Passenger Was Arrested In Katunayake

அங்கு, விமானப் பயணியின் உணவுப் பாத்திரங்களை விமானப் பணிப்பெண் அகற்ற முனைந்தபோது, ​​அவரது இடது கையால், மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பிடித்து, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமான ஊழியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களும் விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையர்களுடன் எரிபொருள் கப்பலை கைப்பற்றிய ஈரான் படை

இலங்கையர்களுடன் எரிபொருள் கப்பலை கைப்பற்றிய ஈரான் படை

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இது தொடர்பில் அறிவிக்க விமானி நடவடிக்கை எடுத்ததுடன், இந்த விமானம் இன்று 30 ஆம் திகதி காலை 08.45 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் குழுவினர் பயணியை கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் மாரடைப்பு

கைது செய்யப்பட்ட பயணிக்கு விமான நிலைய காவல் நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தகாத முறைக்கு உள்ளான விமானப் பணிப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

நடுவானில் நடந்த சம்பவம் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது | The Passenger Was Arrested In Katunayake

இதற்கிடையில், பயணியின் மனைவி முறைப்பாடு அளித்து, தனது கணவர் விமான ஊழியர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தனது கணவர் 14 வருடங்களாக குவைத்தில் உள்ள கொரிய நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவ்வப்போது கொழும்பு வந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

வான்வெளியில் இடம்பெற்ற சம்பவம் என்பதால் பயணியை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாகவும், அவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத் தளபதி தெரிவித்துள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி