யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jul 22, 2025 11:23 AM GMT
Report

வட்டுக்கோட்டை (Vaddukoddai) காவல்துறையினரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில், “மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்தசில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வட்டுக்கோட்டை வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது எமது பகுதியை சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர்.

பிரித்தானியா புலம்பெயர காத்திருப்போருக்கு பேரிடி - இன்று முதல் புதிய விதி

பிரித்தானியா புலம்பெயர காத்திருப்போருக்கு பேரிடி - இன்று முதல் புதிய விதி

காவல்துறையினர்

இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்திற்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டனர்.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள் | The Reckless Actions Of The Vaddukottai Police

பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது காவல்நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றனர்.

காவல்துறையினர் முன்னேற்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால் தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் காவல்துறையினர் அதனை செய்யவில்லை.

குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு

நோயாளர் காவு வண்டி

எங்களை காவல்நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர். பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர்மீது கொடூர தாக்குதல் நடாத்தினர்.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள் | The Reckless Actions Of The Vaddukottai Police

பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை காவல்நிலையம் கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்தார்.

அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை காவல்துறையினர் தாகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கி போடுவோம் என கூறினர்.

பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். காவல்தறையினர் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள் | The Reckless Actions Of The Vaddukottai Police

இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் காவல்துறை காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் 

பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவன் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற காவல்துறையினர் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்று சென்றனர். பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேகநபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள் | The Reckless Actions Of The Vaddukottai Police

இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த பொறுப்பதிகாரி எமக்கு தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது காவல் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த காவல்துறை பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர்.

மக்களையும், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரையும், உதவிப் காவல்துறை அத்தியட்யட்சகரையும், வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கனேடிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கனேடிய பெண்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் மாநாடு

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் மாநாடு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025