கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கனேடிய பெண்
கனடாவில் (Canada) இருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகோட தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணை
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சீவலி அருகோட தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
