அமெரிக்கா- சவுதி துல்லிய தாக்குதல் : ஈரான் ஆதரவு அமைப்பிற்கு ஏற்பட்ட பெரும்சேதம்
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான Iraq's Popular Mobilization Forces (PMF) மீது நாடு முழுவதும் உள்ள பல மாகாணங்களில் உள்ள அதன் தலைமையகங்களைக் குறிவைத்து இரவு நேரத்தில் அமெரிக்கா-சவுதி இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்தது.
ஈராக் செய்தி நிறுவனம் (INA) வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாக்தாத், வாசித், நினேவா, பஸ்ரா, கிர்குக், கர்பலா மற்றும் தியாலா ஆகிய மாகாணங்களில் உள்ள அதன் தளங்களை லக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைமையகம், இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் PMF கூறியுள்ளது.
ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடு
சேதத்தின் முழு அளவைத் தீர்மானிக்க, சிறப்பு ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடுகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களின் இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியானது.
சவுதி விடுத்த எச்சரிக்கை
இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.

சவுதி அரேபியாவோ, ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, ஈராக்கியப் பகுதியிலிருந்து சவுதி அரேபியாவின் பெட்ரோலிய வசதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியது.
மேலும், ஈரான் ஆதரவுக் குழுக்கள் சவுதி அரேபியா மீது மேலதிக தாக்குதல்களை நடத்தினால், மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.
images credit -.aljazeera
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
